ஆப்நகரம்

Edappadi K Palaniswami: சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!

சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Dec 2018, 8:31 am
சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Inernational Film Festical


சர்வதேச திரைப்பட விழா இன்று சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து 20ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளைக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற 9-வது சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் தொகையானது ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி