ஆப்நகரம்

மாலை 5 மணிக்கு முதலமைச்சர் உரை... தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?

இன்று மாலை 5 மணிக்கு, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ​உரையாற்ற உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Samayam Tamil 29 Jul 2020, 3:35 pm
இன்று மாலை 5 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உரையாற்ற உள்ளார்.
Samayam Tamil எடப்பாடிபழனிசாமி


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுக்க ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

இன்னும் இரு தினங்களில் இந்த ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று (ஜூலை 29) தமிழ்நாடு முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அமைச்சர்கள் மற்றும் மருத்துவக்குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர்கள், மருத்துவக்குழு மற்றும் ஆட்சியர்கள் என, மூன்று கட்ட ஆலோசனை முடிந்துள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் உரையாற்ற உள்ளார்.

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அதிரடி உத்தரவு!

ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்தும், பள்ளி, கல்லூரிகளின் திறப்பு, மற்றும் நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் முதல்வர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முறையே ஆகஸ்ட் 16 மற்றும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ல நிலையில், முதல்வரின் இன்றைய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அடுத்த செய்தி