ஆப்நகரம்

அதிசயம்...அதிசயம்னு பேசிவரும் ரஜினிகாந்துக்கு முதல்வர் கொடுத்த 'நோஸ்கட்'

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். எதுவானாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நோஸ்கட் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 21 Nov 2019, 5:38 pm
ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகுதான் அவர் சொல்லும் அதிசயத்துக்கெல்லாம் பதிலளிக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'நோஸ்கட்' செய்துள்ளார்.
Samayam Tamil rep


கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், ரஜினிக்கு "இந்திய சினிமாவின் ஐகான்" என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது நேற்று வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற பின் இன்று அவர் சென்னை திரும்பினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "2021 -இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தையும், அற்புதத்தையும் நிச்சயம் நிகழ்த்துவார்கள்" எனக் கூறியிருந்தார்.

Breaking: 2021 இல் மிக பெரிய அதிசயத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் : ரஜினி

ரஜினியின் இந்தக் கருத்து குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தூத்துக்குடியில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு முதல்வர் அளித்த பதில்:

எதனடிப்படையில் அற்புதம், அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் சொல்கிறார் எனத் தெரியவில்லை. 2021 -இல் மீண்டும் அதிமுக ஆட்சிதான் மலரும் என்பதை தான், அவர் அற்புதம் என்று சொல்கிறாரா எனத் தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும், முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு ரஜினி சொல்வதற்கெல்லாம் பதில் தரலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2006- இல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதே சட்டப்பேரவையிலேயே பேசியுள்ளார்.

மேயர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், பெரும்பாலான கவுன்சிலர்கள் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதால், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக பணியாற்ற முடியவில்லை எனவும் அவர் பேசியுள்ளார். இதன் மூலம், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஜினி தமிழர்களால் தூள் தூளாக்கப்படுவார்: சீமான் ஆவேசம்!

தன்னுடைய கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் மறைமுகத் தேர்தல் முறையை மேற்கோள்காட்டியும் சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசியுள்ளார். 2006-இல் ஸ்டாலின் சொன்னால் சரி, தற்போது நாங்கள் சொன்னால் தவறா? என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலில் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி