ஆப்நகரம்

ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்!

பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், முதல்வர் பழனிசாமி இலவச வேட்டி, சேலை வழங்கினார்.

Samayam Tamil 29 Dec 2018, 5:37 am
பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், முதல்வர் பழனிசாமி இலவச வேட்டி, சேலை வழங்கினார்.
Samayam Tamil free dhoties


கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற்காகவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ஆம் ஆம்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் இலவச வேட்டி, சேலை வழம்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழம்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் வேட்டிகளும்பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று 5 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எம்.மணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி