ஆப்நகரம்

"சமூக நீதி".. கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகை.. தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின்..

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகை வழங்க வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 19 Apr 2023, 10:09 am
சென்னை: கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.
Samayam Tamil mk stalin assembly


இந்தியாவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட பல்வேறு சமூக பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இடஒதுக்கீட்டை பொறுத்தவரை, இந்து மதத்தினராக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் முழுப்பலன்களும் கிடைக்கும் வகையில் நமது சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவர்களாக மதம் மாறினால், அவர்பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் (Backward Caste) கொண்டு வரப்படுவார். இந்து மதத்தில் உள்ள ஆதி திராவிடர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மதம் மாறியவருக்கு கிடைக்காது.

இந்நிலையில், இந்த முறைக்கு முடிவுக்கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவம், முஸ்லிம் என எந்த மதத்திற்கு மாறினாலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுக்குரிய சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அந்த சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளார். அதாவது, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.

முன்னதாக, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதி இருக்கிறார். அதேபோல, மதம் மாறிய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கான சலுகைகளை வழங்கக் கோரி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் சார்பில் ஏற்கனவே மத்திய அரசு பரிந்துரை வழங்கப்பட்டது. எனினும், இந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி