ஆப்நகரம்

சொந்த ஊர் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர்

தனது சொந்த ஊரில் உள்ள கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார்.

TNN 2 Feb 2017, 10:36 am
மதுரை: தனது சொந்த ஊரில் உள்ள கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார்.
Samayam Tamil tamilnadu cm ops participated in temple festival at his home town
சொந்த ஊர் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர்


அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதல்வர் பொறுப்பேற்றது முதலே பம்பரமாக சுற்றி, பல்வேறு பிரச்னைகளில் தீர்வு கண்டு வருகிறார். கிருஷ்ணா நதி நீர், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் உள்பட பல பிரச்னைகளில் வெற்றி கண்டுள்ளார்.

இந்நிலையில், தனது சொந்த ஊரான தேனி பெரியகுளத்தில் உள்ள கோபால கிருஷ்ண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார்.

முன்னதாக, குடியரசு தின விழாவில் தனது மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் முதல்வர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilnadu CM OPS participated in temple festival at his home town

அடுத்த செய்தி