சென்னை: தமிழக ஆளுநரை, முதலமைச்சர் பழனிச்சாமி இன்னும் சில மணி நேரங்களில் சந்திக்கவுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நேற்று பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் நிறைவடைந்தது. ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது.
அதன் உச்சகட்டமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர். இன்று மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதலமைச்சர் பழனிச்சாமி இன்று இரவு 9 மணியளவில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக தூத்துக்குடியில் வதந்திகள் பரவாமல் இருக்க 3 மாவட்டங்களில் இணையசேவை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Tamilnadu CM Palanisami will meet Governor today night about sterlite protest.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நேற்று பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் நிறைவடைந்தது. ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது.
அதன் உச்சகட்டமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர். இன்று மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதலமைச்சர் பழனிச்சாமி இன்று இரவு 9 மணியளவில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக தூத்துக்குடியில் வதந்திகள் பரவாமல் இருக்க 3 மாவட்டங்களில் இணையசேவை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Tamilnadu CM Palanisami will meet Governor today night about sterlite protest.