ஆப்நகரம்

முதன்முறையாக பாஜகவை எதிர்த்து பேசிய பழனிசாமி!

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக தான் உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 19 Feb 2018, 10:19 am
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக தான் உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil tamilnadu cm pannerselvam speech against bjp modi
முதன்முறையாக பாஜகவை எதிர்த்து பேசிய பழனிசாமி!



தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி மையாக உள்ளதாக பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


மேலும், பொன்.ராதாகிருஷ்ணின் இந்த கருத்தை மறுப்பவர்கள் புத்தி சுவாதீனம் உள்ளவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தை விட சட்டம் ஒழுங்கில் தமிழகம் நன்றாக தான் உள்ளதாகவும், பொன்.ராதாகிருஷ்ணன் தவறான கருத்தை கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனக்கும் பன்னீர்செல்வத்துக்கும் எந்த விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை என்றும், ஊடகங்கள் தான் சிறு பிரச்னைகளை கூட பெரிதாக காட்டுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி