ஆப்நகரம்

மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்

குவைத்தில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் கேரளா மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

TNN 19 Mar 2016, 4:10 pm
சென்னை: குவைத்தில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் கேரளா மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil tamilnadu cm writes letter to pm
மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்


குவைத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மற்றும் கேரள மீனவர் ஒருவரை மீட்க, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்களை அழைத்து சென்றவர் அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர், மீனவர்களின் நிலுவை தொகையை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி