ஆப்நகரம்

இரட்டை இலை முடக்கப்பட்டது பா.ஜ., சதி: திருநாவுக்கரசர்!

இரட்டை இலை முடக்கப்பட்ட விஷயத்தில் பா.ஜ.,வின் சதி தான் காரணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 25 Mar 2017, 8:07 am
சென்னை: இரட்டை இலை முடக்கப்பட்ட விஷயத்தில் பா.ஜ.,வின் சதி தான் காரணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilnadu congress committee president thirunavugarasar accusation on bjp issue of admk two leaf
இரட்டை இலை முடக்கப்பட்டது பா.ஜ., சதி: திருநாவுக்கரசர்!


சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் கூறுகையில், ’ மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த போக்கை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யதுள்ளோம்.

வறட்சி நிவாரண நிதி குறைவை சுட்டிக்காட்டாமல் தமிழக பாஜக மக்களுக்கு எதிராக குரல் கொடுப்பது வேதனையாக உள்ளது. இதை கடுமையாக கண்டிக்கிறோம். இது தான் தமிழகத்தில் பா.ஜ.., வளராமல் இருக்க முக்கிய காரணம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். இரட்டை இலை முடக்கப்பட்ட விஷயத்தில் பா.ஜ., சதி உள்ளது. ’என்றார்.

Tamilnadu congress Committee president Thirunavugarasar Accusation on bjp issue of admk two leaf.

அடுத்த செய்தி