ஆப்நகரம்

அவர்கள் நிரபராதிகள் அல்ல: தமிழ்நாடு காங்கிரஸ்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 18 May 2022, 2:04 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் , தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 142ஆவது பிரிவு வழங்கியுள்ள தனக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.
Samayam Tamil கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி


பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு வெளியானதும் அவரது உறவினர்கள், விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த பல்வேறு தரப்பினரும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆணந்த கண்ணீர் வடித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், “முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்!
இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்ச நீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி