ஆப்நகரம்

அம்மா உணவகமா, அதிமுக அலுவலகமா? - காங்கிரஸ் கேள்வி

அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க அதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார்.

Samayam Tamil 21 Apr 2020, 7:04 pm
அம்மா உணவகங்கள் தொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
Samayam Tamil ks alagiri


சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்திவந்த அம்மா உணவகங்கள் அனைத்திலும் அதிமுக சார்பிவ் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார்.

அம்மா உணவகங்களில் முட்டையுடன் சேர்த்து உணவு இலவசம்!

இதையடுத்து, இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்புகள் தமிழக அரசின் சார்பில் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க, அதிமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா?

அம்மா உணவகம் என்பது அரசுக்கு சொந்தமானது. அதை ஆளுங்கட்சி தமக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது. அப்படி மீறி பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகமாகும் என்று தமது அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகத்திற்கு ரூ. 50 லட்சம் கொடுத்த ராகவா லாரன்ஸ்

அதிமுகவை விளம்பரப்படுத்தும் நோக்கில் அம்மா உணவகங்களை பயன்படுத்தும் தமிழக அரசின் செயல் குறித்து திமுகவும் கேள்வியெழுப்பியுள்ளது.

ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில், அரசியல் கட்சியினரோ, தன்னார்வ அமைப்புகளோ பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி