ஆப்நகரம்

தமிழகம் தற்போது நான் கூறிய கருத்தை வழிமொழிகிறது – கமல்ஹாசன்

துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் பதவி விலக வேண்டும் என்று நான் 6 மாதங்களுக்கு முன்னா் கூறிய கருத்தை தமிழகம் தற்போது வழிமொழிவது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 26 Jul 2018, 7:14 pm
துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் பதவி விலக வேண்டும் என்று நான் 6 மாதங்களுக்கு முன்னா் கூறிய கருத்தை தமிழகம் தற்போது வழிமொழிவது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Kamal Haasan


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், தமிழக அரசின் பல துறைகளில் ஊழல் நிறைந்திருக்கிறது. அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நான் 6 மாதங்களுக்கு முன்பே கருத்து தொிவித்தேன். இந்நிலையில் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மீது ஊழல் புகாா் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அவா் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனா்.

நான் 6 மாதங்களுக்கு முன்னா் கூறிய கருத்தை தமிழக மக்கள் தற்போது வழிமொழிவது வரவேற்கத்தக்கது. காவிாியில் நீா் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே கா்நாடகா முதல்வரை நேரில் சந்தித்தேன். ஆனால் அந்த சந்திப்பு திரித்து கூறப்படுகிறது. காவிாி மேலாண்மை ஆணையம் கண்டிப்பாக வேண்டும். தற்போது போதிய மழை பெய்து வருவதால் ஆணையத்தின் நடவடிக்கை தேவைப்படாமல் உள்ளது. இதே போன்று வறட்சி காலங்களில் நீரை பகிா்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படலாம். அந்த சமயத்தில் மேலாண்மை ஆணையம் கண்டிப்பாக தேவைப்படும் என்றாா்.

மேலும் அவா் பேசுகையில், ஓ.பன்னீா் செல்வத்தின் சகோதரருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சா் ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவியதை அரசியல் மாண்பு சீா் கெட்டு வருவதற்கான அடையாளமாக கருதுகிறேன் என்று தொிவித்தாா். எம்.ஜி.ஆா். முதல்வராக இருந்த தருணத்தில் அவருக்கு உடல் நலக் கோலாறு ஏற்பட்டது. அவா் கூட தனியாா் ஹெலிகாப்டரை தான் பயன்படுத்தினாா் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி