ஆப்நகரம்

அணைகளில் தொடர்ந்து சரியும் நீர்மட்டம்: வறட்சியை நோக்கிச் செல்லும் தமிழ்நாடு

தமிழ்நாட்டின் அணைகளில் உள்ள நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து கொண்டே செல்வதால், வறட்சியை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

TNN & Agencies 11 Jan 2017, 8:40 am
சென்னை: தமிழ்நாட்டின் அணைகளில் உள்ள நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து கொண்டே செல்வதால், வறட்சியை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil tamilnadu dams are getting down in water level to become dry
அணைகளில் தொடர்ந்து சரியும் நீர்மட்டம்: வறட்சியை நோக்கிச் செல்லும் தமிழ்நாடு


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடியாக உள்ளது. பாபநாசம் அணையில் 28.50 அடியாகவும், சேர்வலாறு அணையில் 60.17 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 36.78 அடியாகவும் உள்ளது.

கன்னியாகுமரியில் உயிர்நாடி அணையான பேச்சிப்பாறையில் 7.65 அடி தண்ணீர் உள்ளது. இதன் மொத்த கொள்ளவு 48 அடி ஆகும். 77 அடி கொண்ட பெருஞ்சாணியில் 29.20 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. வைகை அணையில் 25.75 அடியும், முல்லைப் பெரியாறு அணையில் 110.70 அடியும் தண்ணீர் உள்ளது. மேலும், அனைத்து குளங்கள், ஏரிகள், ஊரணிகள் வறண்டுள்ளன. இதனால் தற்போதே பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீருக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது.

கோடை காலத்தில் நிலவும் வறட்சி போன்று, தற்போதே பொது மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் சாலை மறியல், முற்றுகை போராட்டம் என நாள்தோறும் நடந்து வருகிறது. தற்போதே, வறட்சி கடுமையாக உள்ள நிலையில், கோடை காலத்தில் வறட்சியின் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

Tamilnadu dams are getting down in water level to become dry.

அடுத்த செய்தி