ஆப்நகரம்

புயல் பாதித்த டெல்டாவில் கனமழை; அடுத்து எப்பகுதிகளில் பலத்த மழை? வானிலை மையம் தகவல்!

சென்னை: டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 Nov 2018, 12:32 pm
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைபூண்டி - 10 செமீ, ஆணைக்காரன் சத்திரம் - 7 செமீ, சீர்காழி- 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
Samayam Tamil IMD


சிதம்பரம், பரங்கிப்பேட்டை, மயிலாடுதுறை, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 செமீ மழைப் பதிவாகியுள்ளது. தென் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது.

வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும். மேலும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 1 முதல் இன்று வரை பதிவான மழை அளவு 31 செமீ ஆகும். இது 12% மழை அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது என்று பாலச்சந்திரன் கூறினார்.

அடுத்த செய்தி