ஆப்நகரம்

வெட்டுக்கிளிகளால் தமிழகத்துக்கு ஆபத்தா? என்ன சொல்கிறது அரசு?

வெட்டுக்கிளி படையெடுப்பு பூதாகரமாகியுள்ள நிலையில், தமிழகத்தின் அதன் ஆபத்து குறித்து தமிழக வேளாண் துறை விளக்கமளித்துள்ளது

Samayam Tamil 27 May 2020, 2:36 pm
Locust எனப்படும் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசமாக்கி கடுமையான் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த வெட்டுக்கிளி படையெடுப்பானது பாகிஸ்தான் எல்லையையொட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வழக்கமாக இருக்கும் நிலையில், ஜெய்பூர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் வரை நிகழ்ந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ராஜஸ்தான் மாநிலம் மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலும் லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசமாகின.

இந்த வெட்டுகிளிகள் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை கடந்து இந்திய பெருங்கடல் வழியாக இந்தியாவுக்குள்ளும், பாகிஸ்தானுக்குள்ளும் அடுத்த மாதம் படையெடுக்கும் என ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெட்டுக்கிளிகள்: தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு சவால் - பூவுலகின் நண்பர்கள்

எனினும், இவை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை எனவும், அதற்குள்ளாக அவை அழிக்கப்பட்டு விடும் அல்லது அதன் உணவு தேவை அதற்குள்ளாகவே முடிந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமாக ராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு நின்று விடும் இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு, 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளதால் அச்சம் நிலவுகிறது.

வேளாண் துறை

வேளாண் துறை


அத்துடன், உணவுப்பாதுகாப்புக்கு பெரும் கேள்விக்குறியாக விளங்குகும் இந்த வெட்டுக்கிளிகளின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மையாக இருப்பதால், தமிழக விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், வெட்டுக்கிளிகள் படையால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்தி கையாள்வதற்கான வழிமுறைகளையும் வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி