மகா புஷ்கர விழாவின் 11வது நாளான இன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடியுள்ளார். கடந்த 11ம் தேதி முதல் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. இந்த மகா புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.முதல் நாளனறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு புனித நீராடினார். இதையடுத்து, அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில், 11வது நாளான இன்று தாமிரபரணியில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடியுள்ளார். இதற்காக நேற்று இரவு அம்பாசமுத்திரம் வந்த ஓபிஎஸ், இரவு ஓட்டலில் தங்கியுள்ளார். இன்று காலை 7.50 மணிக்கு பாபநாசம் சென்ற அவர், தாமிரபரணி ஆற்றில் புனித நீராடியுள்ளார்.
தொடர்ந்து பாபநாசம் நாதர் கோவிலுக்குச் சென்று சாமிதரிசன்ம் செய்துள்ளார். இதையடுத்து வீரவநல்லூர் அருகிலுள்ள அத்தாளநல்லூருக்கு சென்றுள்ளார். அங்குள்ள கஜேந்திரப்பெருமாள் கோவிலில் நடந்த புஷ்கர விழா பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அதிமுக நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் என்று பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் வருவதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 11வது நாளான இன்று தாமிரபரணியில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடியுள்ளார். இதற்காக நேற்று இரவு அம்பாசமுத்திரம் வந்த ஓபிஎஸ், இரவு ஓட்டலில் தங்கியுள்ளார். இன்று காலை 7.50 மணிக்கு பாபநாசம் சென்ற அவர், தாமிரபரணி ஆற்றில் புனித நீராடியுள்ளார்.
தொடர்ந்து பாபநாசம் நாதர் கோவிலுக்குச் சென்று சாமிதரிசன்ம் செய்துள்ளார். இதையடுத்து வீரவநல்லூர் அருகிலுள்ள அத்தாளநல்லூருக்கு சென்றுள்ளார். அங்குள்ள கஜேந்திரப்பெருமாள் கோவிலில் நடந்த புஷ்கர விழா பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அதிமுக நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் என்று பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் வருவதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.