ஆப்நகரம்

ஜெயலலிதா நலன்கருதி யாகம்! மயக்கம் அடைந்த கல்வி அமைச்சர்!!

ஜெயலலிதா நலன்கருதி யாகம்! மயக்கம் அடைந்த கல்வி அமைச்சர்!!

TOI Contributor 11 Oct 2016, 12:33 am
தருமபுரி : முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி யாகம் நடத்திய கல்வி அமைச்சர் அன்பழகன் மயக்கம் அடைந்ததார்.
Samayam Tamil tamilnadu education minister faint during yanga done for jayalalitha health
ஜெயலலிதா நலன்கருதி யாகம்! மயக்கம் அடைந்த கல்வி அமைச்சர்!!


முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று கல்வி அமைச்சர் அன்பழகன் தருமபுரி பிரகதாம்பாள் அருளீஸ்வரர் கோவிலில் யாகம் நடத்தினார். அப்போது அக்னி குண்டத்தில் இருந்து அதிகமாக புகை எழுந்ததால் அமைச்சருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. யாகம் நடந்த இடத்திலேயே அமைச்சர் மயக்கமாகிவிட்டார். அவரை கோவிலின் புகை இல்லாத பகுதிக்கு கட்சி தொண்டர்கள் அழைத்துச்சென்றனர்.
சுமார் அரைமணிநேரம் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு மயக்கம் தெளிந்தது. மயக்கம் தெளிந்த பின்னர் மீண்டும் யாக பூஜைகளில் கலந்து கொண்டார். பூஜையை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. அதே போன்று அரூர் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் முருகன் தலைமையில் அங்குள்ள பழையபேட்டை காளியம்மன் கோவிலில் 7 வகை யாகம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு இடங்களிலும் அதிமுக தொண்டர்கள் அபிஷேகங்களும், பூஜைகளும் செய்துவருகின்றனர்.

Tamilnadu education minister Anbazhagan fainted during yanga done for jayalalitha health.

அடுத்த செய்தி