ஆப்நகரம்

என்ன சொல்வார் சசிகலா? காத்திருக்கிறது தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமனம் செய்யப்பட்டது குறித்த நோட்டீஸுக்கு சசிகலாவின் பதிலை எதிர்நோக்கி தமிழக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.

TNN 27 Feb 2017, 2:59 pm
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமனம் செய்யப்பட்டது குறித்த நோட்டீஸுக்கு சசிகலாவின் பதிலை எதிர்நோக்கி தமிழக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.
Samayam Tamil tamilnadu election commission waiting for v k sasikalas answer
என்ன சொல்வார் சசிகலா? காத்திருக்கிறது தேர்தல் ஆணையம்


அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவில் உறுப்பினராக உள்ள அனைவரும் வாக்களித்து தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தற்காலிக பொதுச்செயலாளராக யாரையும் நியமிக்க முடியாது என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாருக்கு வி.கே.சசிகலா பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் (நாளை) பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 17ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

நாளையுடன் தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு அளித்த கெடு முடிவதால் அவர் என்ன பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி