ஆப்நகரம்

பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள்; எங்கள காப்பாற்ற யாருமே இல்லையே?

பிரதமர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுடன், போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

TNN 27 Sep 2017, 1:34 pm
டெல்லி: பிரதமர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுடன், போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil tamilnadu farmers protest near pm house
பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள்; எங்கள காப்பாற்ற யாருமே இல்லையே?


விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இவர்கள் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்கட்டப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது கட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் 74வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் வீட்டின் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் படுத்து உருண்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் அதனை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tamilnadu farmers protest near PM house.

அடுத்த செய்தி