ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட 80 தமிழக மீனவர்கள் இன்று மாலை காரைக்கால் வந்து சேர்ந்தனர்.

TNN 4 Sep 2017, 9:24 pm
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட 80 தமிழக மீனவர்கள் இன்று மாலை காரைக்கால் வந்து சேர்ந்தனர்.
Samayam Tamil tamilnadu fishermans release today by the srilankan navy
தமிழக மீனவர்கள் விடுதலை


மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதும், அவர்களின் படகுகளை சிறைப்படுத்தி சேதப்படுத்துவதும் இலங்கை கடற்படையினரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்தவாரம் கூட நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களையும் அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினர் இதுவரை கைது செய்த 80 தமிழக மீனவர்களையும் இன்று சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இந்த மீனவர்கள் 80 பேரும் இன்று மாலை காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர். இதில் நாகையை சேர்ந்த 8 பேர், புதுக்கோட்டையை சேர்ந்த 8 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்த 24 பேர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamilnadu fishermans release today by the srilankan navy.

அடுத்த செய்தி