ஆப்நகரம்

தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை சிறை விதித்தது இலங்கை நீதிமன்றம்!

இலங்கை கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு, ஜூலை மாதம் 7ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

TNN 24 Jun 2017, 8:48 pm
இலங்கை கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு, ஜூலை மாதம் 7ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tamilnadu fishermen remanded in sri lankan jail
தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை சிறை விதித்தது இலங்கை நீதிமன்றம்!


நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், சங்கர், செந்தில், ராஜசேகர், முகேஷ், ரமேஷ், சக்திவேல் மற்றும் கல்லார் பகுதியை சேர்ந்த ஒரு மீனவர் உள்பட 8 பேர் கடந்த 20-ந் தேதி வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்றிரவு 10 மணியளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டி வந்து விட்டதால் அவர்களை சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று காங்கேசன் துறை நீதிமன்றத்தில் இலங்கை கடலோர காவல்படை ஆஜர்படுத்தியது. அவர்களை, ஜூலை 7ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

Srilankan Court pronounces Jail term for Tamilnadu fishermen until July 7.

அடுத்த செய்தி