ஆப்நகரம்

சத்தியமங்கலம் எல்லையில் சிக்கித் தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள்

சத்தியமங்கலம் எல்லையில் தமிழக மீனவர்கள் பலரும் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

Samayam Tamil 27 Mar 2020, 10:15 pm
மங்களூரில் மீன்பிடி கூலியாக சென்ற இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சுமார் 650 க்கும் அதிக மானோர் சொந்த ஊர்களுக்கு வந்து சேர இயலாத சூழ்நிலையில் கர்நாடக எல்லையில் காத்திருப்பவர் களை உடனடி தலையீடு செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிட உதவிட கோரிக்கை
Samayam Tamil sathyamanagalam


இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இங்கு மீன்பிடி தொழில் பல்வேறு காரணங்களால் நசிவடைந்து வருவதையொட்டி பெருமளவில் மங்களூரில் மீன்பிடி கூலிகளாக சென்று தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை தொடர்ந்து வரும் சூழலில் தற்போதைய கொரானா வைரஸ் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் தொழில் நிறுத்தம், ஊரடங்கு உத்தரவு என அறிவிப்பு செய்துள்ளதை யொட்டி மங்களூரில் மீன்பிடி தொழில் முழுமையாக நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது தாங்கள் அறிந்ததே.

இதனையொட்டி நம் மீனவர்கள் அங்கு தங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேறு வழியின்றி அவர்கள் அனைவரும் வாடகை வேன்களிலும் கார்களிலும் பஸ்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். இச்சூழலில் சமீப மூன்று தினங்களாக அவர்கள் சத்திய மங்கலத்திற்கும் பண்ணாரிக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் நமது தமிழக டோல்கேட் அருகிலேயே இறக்கி விடப்பட்டு அங்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து அனுப்ப பட்டு வந்தனர்.

அப்படி 2 வேன்களில் வந்த 39 மீனவர்கள் நமது இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அங்கேயே இறக்கி விடப்பட்டு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள ஒரு மகாலில் நாளது தேதிவரை மூன்று நாட்களாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர் .

இச்சூழலில் இன்று (27.03.2020 )அதே சத்தியமங்கலம் பார்டரில் சுமார் 37 க்கும் அதிகமான வேன், கார் மற்றும் பஸ்களில் வந்த சுமார் 650 க்கும் அதிகமான இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அங்கு இறக்கி விடப்பட்டு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் அங்கேயே காத்திருப்பில் உள்ளனர்.

தற்போது அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது . ஆனால் அவர்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்கவைத்து பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டால் நல்லது. அதன் பிறகு உரிய முடிவு செய்து அனைவரையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு ஏற்பாட்டில் வாகனங்கள் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்க ஆவண செய்திட கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி