ஆப்நகரம்

யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து மாணவி சாதனை!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கார்த்திகாயினி, யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 21 Feb 2018, 9:34 pm
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கார்த்திகாயினி, யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil tamilnadu girl got the first rank in upsc exam
யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து மாணவி சாதனை!


சமீபத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 110 பேர் இந்த தேர்வை எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் ஐ.எப்.எஸ். பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த வட்டமலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கார்த்திகாயினி தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகாயினி, தனது வெற்றி குறித்து கூறுகையில், எனது குடும்பம் விவசாய குடும்பமாகும். யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் முறை எழுதும் போது, முதன்மை தேர்வில் தோல்வி அடைந்தேன். தொடர்ந்து விடா முயற்சியுடன் 2 ஆம் முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கார்த்திகாயினி கூறினார்.

அடுத்த செய்தி