ஆப்நகரம்

தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கலைப் போட்டிகள் அறிவிப்பு!

சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 21ம் தேதி தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கலைப்போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Jul 2018, 8:55 am
சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 21ம் தேதி தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கலைப்போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
Samayam Tamil tamilnadu goldedn


.நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு 50-ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளதையொட்டி, தமிழ்நாடு பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

தமிழ்மொழி, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

கலைப் போட்டிகள்: தமிழிசை வாய்ப்பாட்டு, பரத நாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி அளவில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் 15 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

இதில், வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவர். மேலும் விவரங்களுக்கு 044- 24937217 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி