ஆப்நகரம்

கொரோனா நிவாரணம் 1,000 ரூபாயை ரேஷன் அட்டைதாரர்கள் பெறுவது எப்படி?

கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ள 1,000 ரூபாயை ரேஷன் அட்டைதாரர்கள் எப்படி பெறுவது என்பது குறித்த வழிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் விவரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Mar 2020, 10:07 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ration card holders


நேற்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவ அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து உணவு வழங்கல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

Coronavirus Free Ration: முதல்வர் அடுக்கிய நிவாரண அறிவிப்புகள்!

ரேஷன் அட்டைதாரகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதற்காக, 2,014 கோடி ரூபாயும், நுகர்வோருக்கு ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருள்களை இலவசமாக அளிக்க 173 கோடி ரூபாய் என மொத்தம் 2,187 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக விலகல் என்பதே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 1,000 ரூபாய் நிவாரண நிதியை பெற, ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் குவிவதை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். கூடவே, ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றையும் பொதுமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரண நிதி, ரேஷன் இலவசப் பொருள்களை வாங்க விருப்பமில்லாத அட்டைதாரர்கள் அதுகுறித்து www.tnpds.gov.in என்ற இணையதளத்திலோ,tnepds app என்ற செயலின் மூலமாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

மார்ச் மாதம் ரேஷன் பொருள்களை வாங்காதவர்களுக்கு, ஏப்ரல் மாதத்தில் அவை சேர்த்து அளிக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி