ஆப்நகரம்

குடிநீர் வரி, சொத்து வரி: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

பொதுமக்கள் தங்களது குடிநீர் வரி, சொத்து வரி செலுத்த மூன்று மாதம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 Apr 2020, 12:15 am
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மேலும் நீ்ட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil water tax.


ஊரடங்கின் காரணமாக, பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் முடங்கி போய்வுள்ளது. குறிப்பாக, பல கோடி முறைசாரா தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

அசாதாரணமான இந்த சூழலை கருத்தில் கொண்டு, குடிநீர் வரி, சொத்து வரி செலுத்த பொதுமக்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆவின் பால், பால்கோவோ., வேணுமா ஆன்லைனில் ஆர்டெர் செஞ்சா போதும்!

இதன்படி, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்து வரி நிலுவைத் தொகையை ஜூன் 30 ஆம் தேதி வரை செலுத்தலாம்.

இந்த மூன்று மாத காலத்தில் செலுத்தும் வரிக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி