ஆப்நகரம்

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை: தமிழக அரசு உத்தரவு!

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 7 Dec 2018, 4:13 pm
புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை: தமிழக அரசு உத்தரவு!
புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை: தமிழக அரசு உத்தரவு!


2018-2019ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது கிராமப் பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அதே பகுதியில் மாற்று இடம் வழங்குவதென அறிவிக்கப்பட்டது. மாற்று இடம் கிடைக்காதபட்சத்தில் அதே பகுதியில் தனியார் நிலத்தை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை செயல்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு வரைமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நியமிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் பரிந்துரைத்த நெறிமுறைகளை ஏற்று தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

அதில் நீர்நிலை, மேய்க்கால் மற்றும் சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்தி, அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் பொருட்டு மாற்று இடம் தேர்வு செய்து பயணாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தாலே 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்றும் இதற்காக தனியாரிடம் இடத்தை வாங்கி இலவச வீட்டு மனைகளை வழங்கவும் முடிவு செய்திருப்பதாகவும், ஆறு மாதங்களில் இலவச வீட்டுமனை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி