ஆப்நகரம்

கரும்புக்கு ஆதார விலை டன்னுக்கு 550 உயர்வு

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 550 ரூபாய் உயர்த்தி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

TNN 27 Dec 2016, 3:09 pm
கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 550 ரூபாய் உயர்த்தி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil tamilnadu government raises msp for sugarcane cultivation
கரும்புக்கு ஆதார விலை டன்னுக்கு 550 உயர்வு


கருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை டன்னுக்கு ரூ.2300 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அதனை உயர்த்தி டன்னுக்கு ரூ.2850ஆக அறிவித்துள்ளது. இது மத்திய அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் இது 550 ரூபாய் அதிகமானது.

மேலும், கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகள் அளிக்க முத்தரப்பு குழு அமைக்கவும் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கரும்பு உற்பத்தியைப் பெருக்கவும், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அவர்களது வருமானம் அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகள் முழு அரவைத் திறனை அடைந்து அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான ஆலைகள் டன்னுக்கு ரூ.2600 வழங்கி வருகின்றன. மகாராஷ்டிராவில் பெரும்பாலான ஆலைகள் டன்னுக்கு ரூ.2,475 அளிக்கின்றன என்றும் முதல்வரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி