ஆப்நகரம்

67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை: கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!

எம்ஜிஆர் நூற்றாண்டு பி‌றந்தநாளையொட்டி 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

Samayam Tamil 6 Jun 2018, 10:48 am
எம்ஜிஆர் நூற்றாண்டு பி‌றந்தநாளையொட்டி 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
Samayam Tamil life
67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை: கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!


எம்.ஜி.ஆரின்நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து வரும் சிறைவாசிகளை முன்னதாகவே விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்தது.

இது தொடர்பாகஇந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும், நெறிமுறைகள் குறித்த ஆணைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.

67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை: கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!


அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதியின் படி, 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை கைதிகளில், முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 67 கைதிகளும் இன்று புழல் ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர். சிறையின் வெளியே காத்திருந்த உறவினர்கள் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்றது அங்கிருந்து மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி