ஆப்நகரம்

ஒருவழியா தமிழர்களை மீட்க அரசு முடிவு...

வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மத்திய அரசு காட்டிய வழியைப் பின்பற்றுகிறது தமிழ்நாடு அரசு...

Samayam Tamil 3 May 2020, 2:18 am
வெளிமாநிலங்களில் கல்வி கற்க, கூலி வேலைக்கு, கோயிலுக்குச் சென்று ஊரடங்கு காரணமாகச் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மத்திய அரசு சில வழிமுறைகளைக் காட்டியது இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீட்க அரசு முடிவு எடுத்துள்ளது.
Samayam Tamil ஒருவழியா தமிழர்களை மீட்க அரசு முடிவு...
ஒருவழியா தமிழர்களை மீட்க அரசு முடிவு...


மேலும் தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளி மாநிலத்தவரைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியையும் அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது.

குறிப்பாக இந்த ஊரடங்கு காரணமாகக் கல்வி கற்க, கோவிலுக்கு, கூலி வேலைக்கு வெளி மாநிலங்கள் சென்றவர்கள் பல இடங்களில் சிக்கத் தவிக்கும் மக்களை மீட்க இணைய முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ் நாட்டினர் nonresidenttamil.org என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று அதில் பச்சை நிற படிவத்தில் தங்கள் சுயவிவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதேபோல் தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிமாநல்த்தவரை அவர்கள் சொந்த ஊர் கொண்டு சேர்க்கவும் மேலே குறிப்பிடப்பட்ட இணைய முகவரியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி