ஆப்நகரம்

தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

TNN 26 Jan 2017, 7:01 pm
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilnadu government should responsible for jallikattu protest attack kanimozhi
தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி


ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் சுமார் ஒரு வார காலமாக அறவழியில் போராடி வந்தனர். மாணவர்களின் எழுச்சி போராட்டத்தையடுத்து, தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என கோரி, மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தும் பொருட்டு அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், கூட்டத்தை கலைத்தனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Tamilnadu government should responsible for jallikattu protest attack: Kanimozhi

அடுத்த செய்தி