ஆப்நகரம்

மணல் மாஃபியாவுக்கு பக்கபலமாக செயல்படும் அரசு?

மணல் குவாரிகளை மூட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது.

TNN 30 Nov 2017, 2:17 pm
மதுரை: மணல் குவாரிகளை மூட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது.
Samayam Tamil tamilnadu government to appeal against sand quarry ban
மணல் மாஃபியாவுக்கு பக்கபலமாக செயல்படும் அரசு?


ஆற்று மணல் கொள்ளை அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதையும் நீர் ஆதாரம் பல பகுதிகளில் கேள்விக்குறியாகிவிட்டதையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் புதிய மணல் குவாரிகளை திறக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேவையான அளவு மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூடுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அறிவுறுத்தியது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 நீதிபதி கொண்ட அமர்வில் வரும் திங்கட்கிழமை தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி