ஆப்நகரம்

இலவச ரேஷன் அரிசியை நிறுத்த தமிழக அரசு திட்டம்

தமிழக அரசின் இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் நிறுத்தப்படப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 8 Jan 2017, 12:31 pm
சென்னை: தமிழக அரசின் இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் நிறுத்தப்படப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tamilnadu government to stop giving free rice in ration shops
இலவச ரேஷன் அரிசியை நிறுத்த தமிழக அரசு திட்டம்


மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழக அரசு புதிதாக இணைந்துள்ளது. உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் படி, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டும். ஆனால், இப்போது, தமிழக அரசு எத்தனை பேர் உள்ள குடும்பமாக இருந்தாலும் 20 கிலோ அரிசி மட்டுமே வழங்குகிறது. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்துள்ளதால், 5 பேர் உள்ள குடும்பத்துக்கு 25 கிலோ அரிசி வழங்க வேண்டும். இதற்காக கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும். இதனால், அரசின் செலவு அதிகரிக்கும். இதனைச் சமாளிக்க தமிழக அரசு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய முடிவுசெய்யதுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் திட்டப்படி, கார், பைக், ஏசி மற்றும் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ள குடும்பங்களின் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்குவது ரத்து செய்யப்படவுள்ளது. இதற்காக, ரகசியமாக ரேஷன் ஊழியர்கள் மூலம் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் ஆதார் அட்டை பெற்றவர்கள் விவரம், வீட்டில் கார், பைக், ஏசி இருக்கிறதா என்ற விவரம், ரேஷன் அட்டையில் பெயர் இல்லாமல் வீட்டில் வசிப்பவர்கள் எண்ணிக்கை, எத்தனை சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் இருக்கின்றன என்பன உள்ளிட்ட கேள்விகள் கொண்ட படிவம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக ரேஷன் ஊழியர்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

முதல் கட்டமாக சென்னையில் கணக்கெடுப்புப் பணிகள் மும்மரமாக நடத்தப்படுவதாகவும் சென்னையில் சுமார் 60 சதவீதம் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்குவது ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு இசைவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி