சென்னை : 2016ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருது பெறுவர்களின் விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , " 2016ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் விருதுக்கான விருதாளர்கள்அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2016-ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்திற்கும் கபிலர் விருது - முனைவர் இல.க. அக்னிபுத்திரன் அவர்களுக்கும், உ.வே.சா விருது- முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணன் அவர்களுக்கும், கம்பர் விருது- திரு. இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும்,
சொல்லின் செல்வர் விருது - திரு. பி. மணிகண்டன் அவர்களுக்கும், ஜி.யு.போப் விருது- திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கும், உமறுப்புலவர் விருதுபேராசிரியர் முனைவர் தி.மு. அப்துல் காதர் அவர்களுக்கும், இளங்கோவடிகள் விருது- திரு. நா. நஞ்சுண்டன் அவர்களுக்கும், அம்மா இலக்கிய விருது- திருமதி ஹம்சா தனகோபால் அவர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர் விருது -திருமதி நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ. ஜாகிர் உசேன், திரு. அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, திருமதி உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், செல்வி வி. சைதன்யா, திரு. சி.முருகேசன், திரு.கு.பாலசுப்பிரமணியன், திரு.ச.ஆறுமுகம்பிள்ளை, முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன்ஆகியோருக்கும் 2015ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது-
திரு.செ.முரளி (எ) செல்வ முரளி அவர்களுக்கும், மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மற்றும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ்அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி மேலே அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு விருதினை 25.04.2017 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்குவார் " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilnadu government's tamil newyear award-2016 announced
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , " 2016ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் விருதுக்கான விருதாளர்கள்அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2016-ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்திற்கும் கபிலர் விருது - முனைவர் இல.க. அக்னிபுத்திரன் அவர்களுக்கும், உ.வே.சா விருது- முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணன் அவர்களுக்கும், கம்பர் விருது- திரு. இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும்,
சொல்லின் செல்வர் விருது - திரு. பி. மணிகண்டன் அவர்களுக்கும், ஜி.யு.போப் விருது- திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கும், உமறுப்புலவர் விருதுபேராசிரியர் முனைவர் தி.மு. அப்துல் காதர் அவர்களுக்கும், இளங்கோவடிகள் விருது- திரு. நா. நஞ்சுண்டன் அவர்களுக்கும், அம்மா இலக்கிய விருது- திருமதி ஹம்சா தனகோபால் அவர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர் விருது -திருமதி நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ. ஜாகிர் உசேன், திரு. அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, திருமதி உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், செல்வி வி. சைதன்யா, திரு. சி.முருகேசன், திரு.கு.பாலசுப்பிரமணியன், திரு.ச.ஆறுமுகம்பிள்ளை, முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன்ஆகியோருக்கும் 2015ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது-
திரு.செ.முரளி (எ) செல்வ முரளி அவர்களுக்கும், மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மற்றும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ்அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி மேலே அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு விருதினை 25.04.2017 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்குவார் " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilnadu government's tamil newyear award-2016 announced