ஆப்நகரம்

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய ஆளுநர்!

முதல்வர் நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது விருப்புரிமை நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 15 May 2021, 8:59 pm

ஹைலைட்ஸ்:

  • முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
  • தனது விருப்புரிமை நிதியில் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Banwarilal Purohit - MK Stalin
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் தொற்று பரவல், உயிர்பலி மட்டுமல்லாமல் கூடுதலாக பல்வேறு பிரச்சினைகள் நீடிக்கின்றன.
ஆக்சிஜன் உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், நிதி நெருக்கடி, மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவி என பல்வேறு தேவைகளுக்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.

நிதி தேவையை சந்திப்பதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், தொழில் நிறுவனங்கள், திரை பிரபலங்கள் என பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு உதவிய இஸ்ரோ.. ஓஹோ இதுதான் மேட்டரா!
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில், “கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைவோம் வா எனப் பல நல்லுள்ளங்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1 கோடியை இன்று வழங்கினார். நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் இந்தப் பேரிடரை வெல்வதற்குத் துணையாகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி