ஆப்நகரம்

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்.

Samayam Tamil 29 May 2018, 3:50 pm
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்.
Samayam Tamil Banwarilal Purohit


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்வைத்தனர். இதன் 100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று கூடிய தமிழக சட்டசபையில் தூத்துக்குடி சம்பவத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து, அமளியில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாளை டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கிறார்.

மேலும் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tamilnadu Governor Banwarilal Purohit will visit Delhi next week.

அடுத்த செய்தி