ஆப்நகரம்

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவர் விடுதலை குறித்து ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

Samayam Tamil 9 Sep 2018, 5:49 pm
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவர் விடுதலை குறித்து ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.
Samayam Tamil Rajiv convicts


தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் கூடி நடைபெற்று வருகிறது. இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநரிடம் அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் என்று கேள்விகள் எழுந்துள்ளன. கொலை செய்யப்பட்டவர் முன்னாள் பிரதமர் என்பது வலுவானதாக இருக்கிறது. 7 பேர் விடுதலையை ராஜீவ் குடும்பத்தினர் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அமைச்சரவை பரிந்துரை செய்தால் அதை ஆளுநர் ஏற்றுக் கொண்டு தான் அக வேண்டும் என்று ஒருபிரிவு வாதம் செய்கிறது.

இந்த நடைமுறையை பின்பற்றியே நளினியின் தூக்குத் தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது என கருத்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்று மற்றொரு தரப்பு வாதம் செய்கிறது. 7 பேர் விடுவிப்பு தவறான முன்னுதாரணம் என மத்திய அரசு ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசு பரிந்துரை குறித்து ஆளுநர் முடிவெடுக்க கால அவகாசம் எதுவும் கிடையாது.

மாநில சட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டு, தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை முக்கியமானதாக கருதி, ஆளுநர் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது. தண்டனையை முழுமையாக ரத்து செய்யவோ, குறைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

Tamilnadu Governor has the power to release Rajiv Gandhi case convicts.

அடுத்த செய்தி