ஆப்நகரம்

நாகை நம்பியார் நகரில் 34.30 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம்- தமிழக அரசு அறிவிப்பு!

நாகப்பட்டினம் நம்பியார் நகரில் 34.30 கோடி செலவில், சிறிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 4 Sep 2019, 10:53 am
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் சிறிய மீன்பிடித்துறைமுகம் அமைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை அளித்தார்.
Samayam Tamil fishhhhhhhhhhhh


ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்தை உலுக்குமா? களமிறங்கிய ராமதாஸ்!

இப்பகுதியில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க மீன்வளத்துறையின் தஞ்சாவூர் மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளரால் விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை சென்னையிலுள்ள ஐஐடியால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நம்பியார் நகரில் தன்னிறைவு திட்டத்தின்கீழ் அமையப்பெறவுள்ள மீன்பிடித் துறைமுகத்தின் திட்ட மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்குத் தொகை 34.30 கோடியில் 11.43 கோடியினை மீனவர்கள் அவர்களது பங்களிப்பு தொகையாக வழங்கிட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு!

அதைத் தொடர்ந்து, தன்னிறைவு திட்டத்தின்கீழ் நம்பியார் நகர் பகுதியில் புதிதாக சிறிய மீன்பிடித்துறைமுகம் அமைக்க அரசால் நிர்வாக அனுமதி வழங்கி அரசின் பங்குத் தொகையாக 22.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மீன்பிடி துறைமுகம் அமைவதால் மீன்பிடித் தொழிலையே முழுமையாக வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நம்பியார் நகர் பகுதியினை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் பயன்பெறுவார்கள். அவர்களின் 66 மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் 252 நாட்டுப்படகுகள் இந்த மீன்பிடி துறைமுகம் மூலம் பயன்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி