ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலை மூடல் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

ஸ்டெர்லைட் விவகாரத்தில், தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 31 May 2018, 11:43 am
டெல்லி: ஸ்டெர்லைட் விவகாரத்தில், தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil SC


தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கிடையில் மூடப்பட்ட ஆலை, நீதிமன்றத்தை அணுகி மீண்டும் திறக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் 100வது நாள் தொடர் போராட்டத்தின் போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடும் அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது.

இதையடுத்து ஆட்சியர் ஆலைக்கு பூட்டி சீல் வைத்தார். இந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக, வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, ஸ்டெர்லைட் வழக்கு தொடர்ந்தால், தங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

கேவியட் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்டவர்களின் கருத்தை கேட்ட பிறகே, உத்தரவு பிறப்பிக்க இயலும் என்று சட்டவிதியாகும்.

Tamilnadu Govt filed Caveat petition in Stelite Industry Case.

அடுத்த செய்தி