ஆப்நகரம்

இனி விமானங்கள் முழுமையாக இயங்கலாம்.. தமிழக அரசு தடை நீக்கம்!

உள்மாநில மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 17 Feb 2021, 11:15 pm
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதியன்று நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் விமான பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் லாக்டவுன் தளர்வுகளால் விமானப் பயணங்கள் படிப்படியாக தொடங்கின.
Samayam Tamil Chennai Airport


இந்நிலையில், தமிழகத்தில் இருந்து விமானங்களை முழுமையாக இயக்கிக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை விமான நிலையத்துக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை 50இல் இருந்து 100ஆக உயர்த்த அனுமதி அளித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு: எங்கே, எப்போது தெரியுமா?
மேலும், தமிழகத்துக்குள்ளேயே சென்னைக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை 100இல் இருந்து 150ஆக உயர்த்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபோக, தமிழகம் முழுக்க இருக்கும் விமான நிலையங்களில் தினசரி 50 விமானங்களை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்நாட்டு மற்றும் உள்மாநில விமான பயணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளும்படி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, தமிழகத்தில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களிலும் உள்மாநில மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி