ஆப்நகரம்

ராஜஸ்தானில் தாக்கப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை!

ராஜஸ்தானில் பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள், நாளை தமிழகம் வருகின்றனர்.

TNN 13 Jun 2017, 1:58 pm
ராஜஸ்தானில் பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள், நாளை தமிழகம் வருகின்றனர்.
Samayam Tamil tamilnadu govt officials who attacked by cow rakshas in rajasthan all returning home tomorrow
ராஜஸ்தானில் தாக்கப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை!


ராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியில் இருந்து இரு லாரிகளில் சுமார் 50 பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு தமிழகம் திரும்பியுள்ளனர் கால்நடைத்துறை அதிகாரிகள். அப்போது, பர்மர் மாவட்டத்தின், தேசிய நெடுஞ்சாலை 15வது பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் வாகனம் வந்தபோது, பசு பாதுகாவலர்கள் திடீரென வந்து, சராமரியாக தாக்க தொடங்கினர்.

பசுக்களை இறைச்சிக்காக கடத்திச் செல்வதாக நினைத்து பசுப்பாதுகாவல் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

இனப்பெருக்கத்திற்காக நல்ல பசுக்களையும், கன்றுகளையும் வாங்கிச் செல்வதாக கூறியும், உள்ளூர் காவல்துறையிடம் பெற்ற 'என்.ஓ.சி' தடையில்லா சான்றிதழை காண்பித்தும் அந்த கும்பல் வெறி அடங்கவில்லை.

அதிகாரிகள், லாரி டிரைவர்கள் எனச் சிலர் படுகாயமடைந்த நிலையில், லாரிகளை தீ வைத்து எரிக்கவும் பசு பாதுகாவலர்கள் முயன்றனர்.

இதற்கிடையே, போலீசார் அங்கே வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விசாரணை நடத்தியபின், வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக கால்நடைத்துறை அதிகாரிகளையும், மாடுகளையும் பத்திரமாக மீட்ட போலீசார், தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் நாளை தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Beef row: Tamilnadu govt officials who attacked by cow rakshas in Rajasthan all returning home tomorrow.

அடுத்த செய்தி