ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உள்துறை அமைச்சகத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்!

துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 25 May 2018, 4:30 pm
டெல்லி: துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil Tuticorin Firing
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 100வது நாள் போராட்டத்தை ஒட்டி, ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகள், அமைப்பினர் சார்பில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Govt submitted report to Home Ministry about Tuticorin Firing.

அடுத்த செய்தி