ஆப்நகரம்

10000 சிறப்பு பேருந்துகள்.. பயணிகளுக்கு தமிழக அரசு அலர்ட்!

ஜனவரி 17 - 19 தேதிகளில் 10,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

Samayam Tamil 11 Jan 2022, 5:32 pm
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, பொங்கல் சிறப்பு பேருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Pongal special bus


பொங்கலுக்கு பின்பு ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கம் ஜனவரி 17 முதல் 19ஆம் வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 16 அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப இரண்டு தினங்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


எனவே, பயணிகள் ஜனவரி 16 அன்று பயணம் மேற்கொள்வதை தவிர்த்து மற்ற நாட்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும்படி பயணிகளிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் வழக்கமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகள் போக கூடுதலாக 10,409 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை: இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது!
மேலும், பொங்கல் முடிந்து ஜனவரி 15 அன்று தொலை தூரங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் அனைத்தும், பயணிகள் புறநகர் ரயில் மூலமாக தங்களுடைய இருப்பிடம் செல்வதற்கு ஏதுவாக தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் வழியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி