ஆப்நகரம்

எவரெஸ்டில் காலடி வைத்த முதல் தமிழன்..!!

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார்.இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தமிழர் என்ற சாதனையையும் தனதாக்கியுள்ளார்.

TNN 13 Jun 2016, 7:34 pm
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டை அடைய வேண்டும் என்பது ஒவ்வொரு சாகச விரும்பிகளின் ஆசை.பார்க்க அழகாக இருந்தாலும், உயிரை பலி வாங்கக் கூடிய அளவிற்கு ஆபத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது எவரெஸ்ட் சிகரம்.
Samayam Tamil tamilnadu havildhar reached everest
எவரெஸ்டில் காலடி வைத்த முதல் தமிழன்..!!


ஆனாலும் தற்போது வரை வருடந்தோறும் பல நூறு பேர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட எவெரெஸ்ட் சிகரத்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றும் தமிழரான ஹவில்தார் சிவக்குமார் அடைந்துள்ளார்.இதுமட்டுமல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் மலேசிய வாழ் தமிழர் ஒருவரும், பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழர் ஒருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தததே சாதனையாக இருந்தது.அந்த சாதனையை தற்போது ஹவில்தார் சிவக்குமார் முறியடித்துள்ளார்.

அடுத்த செய்தி