விழுப்புரம்: அ.தி.மு.க. அரசில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடம் வகிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து தே.மு.தி.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என்றார்கள். ஆனால், ஓராண்டு முடிவதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார். இந்த ஓராண்டில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடத்தில் உள்ளது." என்று சாடினார்.
மேலும், " மக்கள் நல்வாழ்வு துறை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்து விட்டதாக கூறுகிறது. கந்து வட்டி கொடுமை தாங்காமல் நெல்லையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து, 3 பேர் இறந்து விட்டனர். கந்து வட்டியால் விவசாயிகளும் இறக்க நேரிடும். இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்." என்றும் கூறினார்.
ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக ரூ.20 கோடி வரை அள்ளி வீசுகிறார்கள். இதில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சம்பாதிக்கிறார்கள் என்றும் கேப்டன் குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து தே.மு.தி.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என்றார்கள். ஆனால், ஓராண்டு முடிவதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார். இந்த ஓராண்டில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடத்தில் உள்ளது." என்று சாடினார்.
மேலும், " மக்கள் நல்வாழ்வு துறை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்து விட்டதாக கூறுகிறது. கந்து வட்டி கொடுமை தாங்காமல் நெல்லையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து, 3 பேர் இறந்து விட்டனர். கந்து வட்டியால் விவசாயிகளும் இறக்க நேரிடும். இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்." என்றும் கூறினார்.
ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக ரூ.20 கோடி வரை அள்ளி வீசுகிறார்கள். இதில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சம்பாதிக்கிறார்கள் என்றும் கேப்டன் குற்றம்சாட்டினார்.