ஆப்நகரம்

வடகிழக்கு பருவமழையில் தமிழகம் நசநசக்கும்!

இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNN 23 Oct 2017, 12:53 pm
இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil tamilnadu likely to get excess of rain this year
வடகிழக்கு பருவமழையில் தமிழகம் நசநசக்கும்!


இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக மழைப்பொழிவை அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மாற்றிவிட்டது.

வடகிழக்கு பருவமழையை வருகிற 26ஆம் தேதிக்கு பிறகு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,

“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் இறுதி வாரம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு வரும் 26ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவழை ஆரம்பிக்கலாம்.

பருவமழை தாமதமானாலும் இந்த ஆண்டு இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி