ஆப்நகரம்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்- முதல்வர் பழனிச்சாமி தகவல்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்டாததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனி அலுவலர்களைக் கொண்டே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்!

Samayam Tamil 10 Aug 2019, 2:59 pm
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்- முதல்வர் பழனிச்சாமி தகவல்!
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்- முதல்வர் பழனிச்சாமி தகவல்!


தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனி அலுவலர்களைக் கொண்டே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 12,542 பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொறு பஞ்சாயத்துக்கும் ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால், மத்திய அரசு ஆண்டுதோறும் அளிக்கும் ரூ. 4 ஆயிரம் கோடி செலவிடப்படாமல் வீணாகிறது. மேலும், உள்ளாட்சிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட முடியாத சூழலும் நிலவி வருகிறது.

நீலகிரி கனமழை- உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்!

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் கட்சியினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டன.

வேலூரில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக கூட்டணியின் மக்களவை பலம் 38 ஆக உயர்வு!

இந்நிலையில், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த 4 புலிக்குட்டிகள், 3 சிங்கக் குட்டிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பெயர் சூடடினார். தொடர்ந்து காண்டாமிருகம் வைக்கப்பட்டுள்ள பகுதியை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; தமிழகத்தில் விரைவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடும். வேலூர் மக்களவை தேர்தலில் குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. இதை நாங்கள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

இனி 100 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வைகோ உடன் புகைப்படம் எடுக்க முடியும்!

நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் உதயகுமார் அதிகாரிகளுடன் சென்று அங்கு முகாமிட்டு, நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது என்றார்.

அடுத்த செய்தி