ஆப்நகரம்

தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது : வெங்கய்ய நாயுடு

தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது மத்திய அரசுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

TNN 23 Jul 2016, 4:18 pm
சென்னை : தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது மத்திய அரசுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilnadu one of the fastest growing state says venkaiah naidu
தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது : வெங்கய்ய நாயுடு


சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகளுக்கான முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய விழாவில் மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.

இதில் பேசிய வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் திட்ட தொடக்கத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சியையே அடிப்படையாக கொண்டது. தமிழகம் வேகமாக வளர்ந்துவரும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் துணை நிற்க்கிறது என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி