ஆப்நகரம்

சசிகலா முதலமைச்சராக தேர்வானதை மக்கள் ஏற்கவில்லை: தீபா

சசிகலா முதலமைச்சராக தேர்வானதை மக்கள் ஏற்கவில்லை என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா குறிப்பிட்டுள்ளார்.

TNN 7 Feb 2017, 4:09 pm
சென்னை: சசிகலா முதலமைச்சராக தேர்வானதை மக்கள் ஏற்கவில்லை என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil tamilnadu people wont accept sasikala as cm says deepa
சசிகலா முதலமைச்சராக தேர்வானதை மக்கள் ஏற்கவில்லை: தீபா


சென்னை தியாகராக நகரில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஏராளமானோர் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர், எனக்கு அதிகளவில் ஆதரவு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து முழுமையான விவரம் தேவை என்றும், 2 மாதங்களுக்கு பின் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவர்கள் அளித்த விளக்கத்தில் தனக்கு திருப்தியில்லை என்று கூறினார்.

பி.எச் பாண்டியன் போன்றோர் கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது என்றும், தமிழகத்திற்கும், தன்னை சார்ந்த மக்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்வேன் என்றும் குறிப்பிட்டார். எந்த பதவியும் வேண்டாம் என்று போயஸ் தோட்டத்தினுள் வந்தவர்கள் இப்போது உண்மைக்கு புறம்பாக நடக்கிறார்கள் என்றும் தீபா குற்றம்சாட்டினார். சசிகலாவைக் கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை என்றும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் பணிகளை தொடருமாறு அதிமுக தொண்டர்கள் தன்னை வலியுறுத்துவதாகவும் தீபா தெரிவித்தார்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க தனக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். ஒருவருடன் 33 ஆண்டுகள் இருந்தது, முதலமைச்சர் ஆவதற்கு தகுதி இல்லை என்றும், சசிகலா முதலமைச்சராக தேர்வானதை மக்கள் ஏற்கவில்லை என்றும் தீபா தெரிவித்தார். சசிகலா முதலமைச்சரானால் நிலையற்ற தன்மை தொடரும் என்று குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும், வரும் 24ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

Tamilnadu People wont accept Sasikala as CM says Deepa.

அடுத்த செய்தி